மூவர்களின் மரணதண்டனையினை ரத்துசெய்யகோரி தமிழகம்எங்கும் உண்ணாவிரதபோராட்டம்
பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகிய 3 தமிழர்களின் உயிர்கள் காக்கப்பட வேண்டும் மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 02.10.2011 இன்று தமிழகம்எங்கும் தமிழ்உணர்வாளர்கள் மற்றும் அமைப்பினரால் உண்ணாவிரதபோராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி அருகில் உலகத்தமிழர் இயக்கதலைவர் பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த உண்ணாவிரதத்தினை மா.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தொடக்கிவைத்தான் மகாத்மா காந்திஅடிகளின் பிறந்த நாளான இன்று உண்ணாவிரதத்தினை தொடக்கிவைத்து கருத்துரைத்த வைகோ.
137 நாடுகளில் தூக்கு தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. ''தூக்கு தண்டனை என்பது திட்டமிட்டு கொலை செய்வதற்கு சமம்'' என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யரே தெரிவித்துள்ளார். ''பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் கூடாது'' என்று காந்தியடிகள் சொல்லியுள்ளார். ஆகவே தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும்.ஒரு உயிருக்காக பல்லாயிரம் உயிர்களை கொன்று குவித்தீர்களே. அதற்கு என்ன பதில். இந்த மூன்று தமிழர்களுக்கு அந்த சம்பவத்தில் சம்பந்தமே கிடையாது என்று நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.
ஆனால் இந்த மூன்று பேரையும் தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அப்படி நடந்தால் நாங்கள் தெருத் தெருவாக சென்று ராஜீவ் அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம் என்பதை மத்திய அரசுக்கு எச்சரிக்கிறோம். தூக்கு கயிறை அறுத்தெறிவோம் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. தூக்கு தண்டனையை ரத்து செய்தே தீர வேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment